Monday, December 8, 2008

வெண்ணிலா தேர்


சாரதி இல்லாமல் சக்கரங்கள் இல்லாமல்
வான வீதியில் உலா வரும்
பால் நிலா

வான மங்கையின் நெற்றியை தேடி
சுழன்று கொண்டிருக்கும் பொன் நிலா

கதிரவனின் கரங்களில் இருந்து
ஒளியை பெற்று தன்னை
புதுப்பித்து கொள்ளும் வெள்ளி நிலா

மேக திரள்களில் ஒளிந்து விளையாடும்
பிள்ளை நிலா

No comments: